ஓர் எழுத்து சொற்கள் 42
42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக காணப்படுகின்றது.
தொல்காப்பிய இலக்கண விதிப்படி இங்கு இணைக்கப்பட்ட குறில் எழுத்துகள் யாவும் ஓரெழுத்து சொற்களுக்குள் அடங்காது என தெரிய வருகிறது. ஆனால் தியா இணைப்பில், ஆறுமுக நாவலர் கூறிய 42 எழுத்துக்களில் குற்றெழுத்துக்களும் உள்ளது.
தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247 ஆகும். இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாகவிளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு.
ஒரு எழுத்து தனியாக நின்று ஒரு சொல்லாகுமானால் அந்த எழுத்து ஒரெழுத்து ஒரு சொல் ( அல்லது) ஒரெழுத்து ஒரு மொழி என்பார்கள்.
ஈ, மை, நீ, கை, கோ, வா, பூ, போ, பை போன்ற ஒரெழுத்து ஒரு சொல்லை பேச்சு வழக்கில் நாம் பயன்ப்படுத்துவோம். ஆனால், தமிழில் நாற்பத்தி இரண்டு எழுத்துக்கள் ஒரெழுத்து ஒரு சொல் உள்ளது.
ஒரேழுத்து சொற்கள் 42 தான் என்று அறுதியிட்டு கூற முடியாது என்று நினைக்கிறேன். ஒரெழுத்தில் இவைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்
ஒரு எழுத்து சொல்லாகி தருகிற அர்த்தங்கள்.
- ஆ - பசு
- ஈ - பறவை
- ஊ - இறைச்சி
- ஏ - கணை
- ஐ - தலைவன்
- ஓ - வியப்பு
- மா - பெரிய
- மீ - மேல்
- மூ - மூப்பு
- மே - மேன்மை
- மை - இருள்
- மோ - மோதுதல்
- தா - கொடு
- தீ - நெருப்பு
- தூ - தூய்மை
- தே - தெய்வம்
- தை - மாதம்
- சா - சாதல்
- சீ - இலக்குமி
- சே - எருது
- சோ - மதில்
- பா - பாட்டு
- பூ - மலர்
- பே - நுரை
- பை - பசுமை
- போ - செல்
- நா - நாக்கு
- நீ - முன்னால் இருப்பவர்
- நே - அருள்
- நை - இகழ்ச்சியை குறிப்பத்து
- நோ - வலி
- கா - பாதுகாப்பு
- கூ - வெல்
- கை - ஒப்பணை
- கோ - அரசன்
- வீ - மலர்
- வை - வைக்கோல்
- வௌ - கைப்பற்றுதல்
- யா - கட்டுதல்
- நொ - துன்பம்
- து - உணவு
இந்த அனைத்து ஓர் எழுத்து சொற்களையும் கவனித்தீர்களானால் ஓர் ஆச்சர்யம் உங்களுக்குத் தெரியும்.இவற்றில் நொ,து,என்ற இரண்டு எழுத்துக்கள் மட்டும் தான் குறில் என்கிற குறைந்த கால அளவுடைய எழுத்துக்கள்.மற்றவை எல்லாம் நீண்ட ஒலி அளவுடைய நெடில் எழுத்துக்களாகும்.
1 Comments
சிறப்பு
ReplyDelete