கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil )

தமிழ் கவிதைகள் (2022) - Tamil Love Kavithai | Sl Tamil

கவிதை போட்டி

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும். 

கவிதை வெற்றியாளர் அறிவிப்பு நாள் 22-10-2022 முடிவில் வெற்றி பெற்றவர்களின் விவரம் நமது கவிதை தளத்தில் அறிவிக்கப்படும்.

வெற்றி பெற வாழ்த்துக்கள்! (முதல் பரிசு ரூபாய் 600)

கவிதை போட்டி தொடங்கும் நாள்: 27-05-2021

கவிதை போட்டி முடியும் நாள்: 12-10-2022

கவிதை வெற்றியாளர் அறிவிப்பு நாள்: 22-10-2022

பரிசு அனுப்பப்படும் நாள்: 28-10-2022


பரிசு இலங்கை ரூபாய்

1.) முதல் பரிசு Rs: 600

2.) இரண்டாம் பரிசு Rs: 400

3.) முன்றாம் பரிசு Rs: 200


கவிதை போட்டிக்கான விதிமுறைகள்:

1.) கவிதை - நீங்கள் எழுதிய சொந்த கவிதையாக இருக்க வேண்டும். (கவிதை வேறு இணைய தளத்தில் எங்கும் பதிவிட்டிருக்கக்கூடாது) 

2.) தமிழ் கவிதைகள் - காதல், நட்பு, தாய்மை, இயற்கை, குடும்பம், வாழ்கை போன்றவற்றை சார்ந்ததாக இருந்தால் நன்று.

4.) குறைந்தபட்ச கவிதை வரிகள் : எட்டு வரிகள்

5.) அதிகபட்ச கவிதை வரிகள் : நாற்பது வரிகள்

3.) உங்களின் கவிதை சிறப்பாக இருப்பின் சமர்ப்பிக்கப்பட்ட 48 மணி நேரத்தில் உங்களின் படைப்பு நமது தளத்திலும் இடம்பெறும்.

7.) உங்களது கவிதை வெளியிட்டதும் மறக்காமல் உங்களது நண்பர்களுக்கு ஷேர் (Share) செய்யுங்கள். (Share) செய்வதன் மூலம் உங்கள் கவிதைக்குரிய ஆதரவினை அதிகம் பெருவீர்கள். EX: WhatsApp, Facebook, Twitter...

6.) வெற்றியாளர்கள் - அந்த கவிதைக்கு கிடைக்கும் பாராட்டு (Likes) மற்றும் விமர்சனங்கள் (Comment) வைத்தும் பரிசு அளிக்கப்படும்.

குறிப்பு (Note) :-

இந்த வருடத்திற்கான கவிதை போட்டி நிறைவுக்கு வந்துள்ளது. வெற்றியாளர் விபரம் கீழே தரப்பட்டுள்ளது.

மீண்டும் 2023 க்கான கவிதைப் போட்டி தைத்திருநாளை முன்னிட்டு 2023 ஜனவரி 15 ம் திகதி ஆரம்பிக்கப்படும்.

உங்கள் அறிவுத்திறனையும், ஆக்கத்திறனையும் எழுத்தாற்றலையும் வெளிப்படுத்த நேயர் பக்கம் மூலமாக உங்களுடைய ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்.

அனுப்ப வேண்டிய லிங்க்

 👉LINK CLICK HERE👈


வெற்றியாலர்கள் அக்டோபர் 22 அன்று அறிவிக்கப்படும்

அன்பார்ந்த உறவுகளே நீங்கள் அனுப்பிய அனைத்து கவிதைகளும் மிகவும் ஆக்கபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் அமைந்திருந்தது. அந்த வகையில் எமது தளத்திற்கு கவிதை அனுப்பிய அனைவரும் வெற்றியாளர்கள் தான். இருப்பினும் இந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட கவிதைப் போட்டியின் நிபந்தனைக்கு ஏற்ப உங்கள் கவிதைகளுக்கு கிடைக்கப் பெற்ற ஆதரவு (Likes) அடிப்படையில் அதிக ஆதரவினைப் (Likes) பெற்ற முதல் மூன்று பேர் மாத்திரமே தெரிவு செய்யப்படுவீர்கள்.





எமது இணையதளம் பற்றிய மேலதிக விபரங்களுக்கு எமது WhatsApp மற்றும் Telegram இனைந்து கொள்ளுங்கள்



👉+94752889156



Post a Comment

2 Comments

  1. (முதியோர் இல்லம் )
    உடைந்த மூக்கு
    கண்ணாடி..! ‌‌ ‌விண்கல் வீழ்ந்த மூக்குத்தி..! குறிஞ்சி பூவின் ஆயுள் குறைத்திடும்
    அன்பு..! இருளை துளைத்த பாட்டியின் விடுகதை..!கடைசியில் விடையறியாமல் வியர்த்தே போனது பூவிதழ் ..!

    ReplyDelete