தமிழ் கவிதை தீதும் நன்றென Tamil Kavithai Manam - செ.ம.சுபாஷினி

தமிழ் கவிதை தீதும் நன்றென  Tamil Kavithai Theethum Nantrena - செ.ம.சுபாஷினி


செக்கென

நிற்கும் கல்லும்

சிவமென

காக்கும் கல்லும்


ஒன்றென எண்ணி

உரசும் நாயின்குணம்

நன்றென கூறின்

நவின்றிடுவார் முட்டாளென.


தீதென்று

நன்றென்று

ஏர் பிடித்து- நாம்

பிரித்து பார்க்கையில்


இன்பமும் துன்பமும்

இடைதனில் சேர்ந்து

சிரித் தழுவதில்

சிறப்பென்ன வாழ்வில்.


திரும்பும் திசையாவும்

தீதும் நன்றென

திரும்பி நீ 

விரும்பிப் பார்


யாவும் நலமென- நம்

சாவும் பிறர்நலமென

ஏவும் எமன்செயல் கூட

சரியென தோனும்.


தீதும் நன்றும்

ஒன்றென எண்ணி

நேர்வழியில் நின்றிடு

தன்வலி தானாய் மாறும்.


நன்றி - செ.ம.சுபாஷினி 

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.





Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments