உன்னிடம் பேச இனி என்ன
இருக்கிறது என்னிடம் மயில் இறகு...!!
என்னுடைய ஒவ்வொரு வார்த்தைகளையும்
தனிமை என்னும் பசிக்கு இரையாக
விட்டு விட்டேன் கலை மகளே...!!
நான் வார்த்தை அற்றவனாக தான்
திரிகிறேன் இத்தனை காலமும்
இனி நீ வந்து என்னிடம்
என்ன பேச போகிறாய் கண்ணே....!!
இத்தனை காலமும் பேசாத வார்த்தைகளை
இந்த ஒரு நாளிலா பேசப் போகிறாய் பெண்ணே...!!
வேண்டாம்.... மெளனமாகவே
பார்த்துக் கொள்ளுவோம்
மௌனங்களினூடே காலம் கடந்து வோம்
மௌனமாகவே பிரிந்து செல்வோம்
வார்த்தைகள் தொலைத்த நமக்கு
மௌனம் ஒன்றே காதல் மொழி:
காதலைத் தொலைத்த நமக்கு
மௌனம் ஒன்றே பேசும் வழி: கண்மணியே....!!
நன்றி - Yothika
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 Comments