தமிழ் கவிதை அம்மா - Tamil Kavithai Amma Thaai

Tamil Kavithai Amma Thaai

அம்மா என்பவள் ஆலம் விழுது போன்றவள்....

ஈரம் காய்ந்தாலும் கிளை சாய்ந்தாலும்

மண் துளைத்து நீர் தேடி வாடிய கிளையின் 

வாட்டத்தைப் போக்குவாள்


அம்மா என்பவள் ஆகாயம் போன்றவள்....

அவளின் அன்பு எல்லையற்றது...

அம்மா என்பவள் அகரம் போன்றவள்...

உன் அனைத்திற்கும் ஆரம்பம் அவள் தான்...


அம்மா என்பவள் அஸ்திவாரம் போன்றவள்....

குடும்பம் எனும் வீட்டின் அசைக்கமுடியா. பகுதி

ஐயமில்லா நம்பிக்கையும் அவள் தான்..

ஒப்பில்லா உறவும் அவள் தான்....

நன்றி - Hussain Althafi

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.




Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments