கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை கல்லூரி பேருந்து
எப்போ வருவாய் தம்பி நீ.....
அப்போ வந்தாய் நீ....
ஞாபகம் இருக்கா உனக்கு....
அதை நினைக்கும்போது சந்தோசம் எனக்கு...
உன் நண்பனோடு கூடிய பேசிடுவாய்.....
சந்தோசமாய் இருந்திடுவாய்....
நீ இல்லாமல் நானே பயணிக்கிறேன்...
நாளெல்லாம் கவலையில் மிதக்கிறேன்...
ஒருமுறை வா நீ....
என் எண்ணத்தை சிதறடிக்கிறாய் நீ...
கல்லூரி போகலாம்...
நாம் இருவரும் பாடங்களை கவனிப்போம்.
மரம்,காற்று,நாங்களெல்லாம் கவலையில் நனைகிறோம்....
உன்னைத் தேடுகிறோம்....
உடனே வந்துவிடு தம்பி....
நான் இருக்குறேனே உன்னை நம்பி...
கண்ணீரை சிந்துகிறேன்....
கவிதையாய் எழுதிகிறேன்....
வேலையில் மூழ்காதே....
என்னை மறக்காதே....
உன் நினைவால் ஓடுகிறேன்....
தினமும் கவிதையால் பாடுகிறேன்....
நன்றி - கா.குறளரசன்.
வணக்கம் நண்பர்களே!
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்
0 Comments