தமிழ் கவிதை தாய்மை தாய் அன்பு (Tamil Kavithai Mother Love)

கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)

தமிழ் கவிதை தாய்மை தாய் அன்பு


தமிழ் கவிதை தாய்மை

சாலையில் காெஞ்சும்  சிரிப்போடு 

மழலை  முகத்தோடு

எதிர்ப்படும் குழந்தையை கண்டுவிட்டாலே 

என் மனம் பூ பந்து போல

துள்ளத் தொடங்கும்

காணம் நீ என் மனதில்

வியாபித்து கொள்வாய்


என்னுள் தோன்றாது உன்னை 

காண என் மனம் பரபரவென்று துடிக்கும்

மல்லிகை மொட்டுக்களை போன்ற 

உந்தன் மேனியை தீண்ட 

என் விரல்கள் தவம் கிடக்கும்


என் மார்பில் உன்னை அணைத்து 

தழுவியது போல மனம்

கற்பனையில் சிறகடிக்கும்

தாயாவதற்கு முன்பே தாய்மையை

என்னுள் சுரக்க வைக்கும்

என் முகம் அறியா குழந்தையே

எங்கே இருக்கும் உன்னை 

அம்மா அழைக்கிறேன் 

சீக்கிரம் வா என்னுள்

நன்றி - surekanth prinsiya

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும். 

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்


போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்


இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம் 



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments