கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை வெளிநாட்டு வாழ்க்கை
வானூர்தியில் பறக்க ஆசைப்பட்டு
வாழைப்பழத்தில் வழுக்கி விழுவதுபோல் ஆயிற்று!
எண்ணி வந்த நினைவு ஒன்று
நடக்கும் நிகழ்வு ஒன்று
தலையணையில் சிரம் தாழ்த்தி
சுகமாக உறங்கியதை விட
அசதியோடு வேதனையில்
தூங்கிய நாட்களே அதிகம்.
பெற்றோரின் இறுதி நாட்களில் கூட
உடன் இருக்க முடியா நிலை
தான் பெற்ற பிள்ளைகளின்
வளர்ச்சி காண முடியாத நிலை
என்ன வாழ்க்கை இது ?
என்று தோன்றுகிறது சில நேரம்.
உழைக்க வேண்டிய வயது
இது தான் என்று எண்ணினாலும்
வாழ வேண்டிய வயதும்
இதுதான் என்று எண்ணும் போது
வலிக்கதான் செய்கிறது உள்ளம்.
எந்த குறையும் இல்லாமல்
இருக்கிறேன் என்று குரல் கேட்கும்
போது தளுதளுக்கிறது
ஏனோ மனைவியின் குரல்.
அன்பை அலைபேசியிலும்
துன்பத்தை தொலைவிலும்
கடக்கும் வாழ்க்கை தான்
வெளிநாட்டு வாழ்க்கை!
நன்றி - ஆ. ஆர்த்தி
வணக்கம் நண்பர்களே!
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்
0 Comments