கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை இயற்கை
மரக்கிளைகள் சண்டை போட
தென்றல் காற்றோ
இசைப்போல பரவும்...
இயற்கையை நாம் பாதுகாத்தால் மட்டுமே....
இயற்கை நம்மை பாதுகாக்கும்!
நாம் இன்று மரம் நட்டால் மட்டுமே....
நம் சந்ததி வளம் பெற முடியும்!
இயன்றதை செய்வோம்....
இயற்கையை பாதுகாப்போம்!
கண்கள் காணும் காட்சியெல்லாம்
மெல்ல மெல்ல
மறைந்து செல்கின்றது
மேகம் வானத்தில் மறைவது போல.!
உள்ளம் கொள்ளை போகுதே
இயற்கையின் வனப்பில்!
பறவைகளின் ஓசையில்!
பருவ மாற்றத்தில்!
காலம் கடந்து செல்லும் வேகத்தில்!
மற்றவர் நம் மீது செலுத்தும் அன்பில்!
மரங்களைப் பார்க்கும்போது
அதிலுள்ள நிழலின் பயன் தெரிகிறது...
மழைகளைப் பார்க்கும்போது அதிலுள்ள துளிகள்
விவசாயிக்கு விருந்தாளியாக பயனாக வருகிறது...
இவ்வுலகில் எதுவும்
பயனுடையதாக தான் தோன்றுகிறது...
நீங்களும் மற்றவருக்கு
பயனுடையதாக வாழுங்கள்...!
நன்றி - மு.ரித்திகா
வணக்கம் நண்பர்களே!
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்..
0 Comments