கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை செந்தமிழே!
தமிழுக்கு அமுதென்று பேர் அந்ததமிழ்
இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
இதுதான் எங்கள் தாய் மொழி
தரணியை ஆண்ட முதல் மொழி
செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே
வீரத்தமிழன் என்று நினைக்கையிலே
புது உணர்வு பிறக்குது உள்ளத்திலே!
ஆயிரம் மொழிகள் அவனியில் வலம் வந்தாலும்
முண்டாசு கட்டி வீறுநடை போட்டது எம் தமிழே!
ஒரு கோடி விந்தணுவில் தப்பி பிழைத்து
கருவாகி பின் உயிராகி
நிற்கும் எமக்கு மூச்சாகி பேச்சாகி
தமிழன் என்ற முகவரி தந்து‐ தனித்துவமான
அடையாளம் தந்து இவ்வுலகை
வெல்ல துணையாய் நின்றது எம் தமிழே!
காற்றிலே நாங்கள் கரைந்து போனாலும்
கடலிலே இறங்கி மூழ்கி போனாலும்
உயிர் தமிழே உன் பெருமை
உலகுக்கு சொல்லாமவ் ஒரு நாளும் வீழமாட்டோம் !
நன்றி - உதயகுமார். ரதிகலா
வணக்கம் நண்பர்களே!
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்..
0 Comments