திருக்குறள் இல்வாழ்க்கை அதிகாரம் - 005
குறள் : 41
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.
குறள் விளக்கம்:
மனைவியோடு கூடிச் சிறந்த வாழ்க்கை வாழ்பவனே கல்விநிலை, மனத்தவநிலை, துறவு நிலை என்னும் மூன்று நிலைகளில் இருப்போர்க்கு உற்ற துணைவன் ஆவான்.
குறள் : 42
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.
குறள் விளக்கம்:
குறள் : 43
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
குறள் விளக்கம்:
குறள் : 44
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
குறள் விளக்கம்:
பொருள் சேர்க்கும் போது பழிக்கு அஞ்சிச் சேர்த்துச் செலவு செய்யும் போது பகுந்து உண்பதை மேற்க்கொண்டால், அவ்வாழ்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.
குறள் : 45
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
குறள் விளக்கம்:
ஒருவனது குடும்பவாழ்க்கையில் கணவன் மனைவியருக்கிடையே அன்பும் அறம் செய்யும் குணமும் இருக்குமானால், அதுவே அவ்வாழ்க்கையின் பண்பும் பயனும் ஆகும்.
குறள் : 46
அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற்
போஒய்ப் பெறுவது எவன்.
குறள் விளக்கம்:
ஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன?.
குறள் : 47
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.
குறள் விளக்கம்:
அறத்தின் இயல்போடு இல்வாழ்கை வாழ்கிறவன்; வாழ முயல்கிறவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகின்றவன் ஆவான்.
குறள் : 48
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.
குறள் விளக்கம்:
மற்றவரையும் அறநெறியில் ஒழுகச்செய்து, தானும் அறம் தவறாத இல்வாழ்க்கை நடத்திடின் அது தவம் செய்வாரை விட மிக்க வல்லமை உடைய வாழ்கையாகும்.
குறள் : 49
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று.
குறள் விளக்கம்:
அறம் என்று சிறப்பிக்கப்பட்டது, மனைவியுடன் வாழும் வாழ்க்கையே; அதுவும் மற்றவர் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.
குறள் : 50
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
குறள் விளக்கம்:
மனைவியுடன் வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் நல்லோர்களின்(தேவருள்) ஒருவனாகவே மதிக்கப்படுவான்.
பால்: அறத்துப்பால்.
இயல்: இல்லறவியல்.
அதிகாரம்: இல்வாழ்க்கை.
பொருள் விளக்கம்
மணக்குடவர் உரை
பரிமேலழகர் உரை
மு. வரதராசன் உரை
கலைஞர் உரை
சாலமன் பாப்பையா உரை
0 Comments