புதிய கல்வியாண்டிற்கான பாடசாலை மாணவர் சேர்க்கை | New academic admission for school students

புதிய கல்வியாண்டிற்கான முதலாம் தர மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன், அதிபர்களின் நேர்முகப்பரீட்சையின் பின்னர் மாணவர்களைத் தெரிவு செய்யப்பட வேண்டும் என இலங்கை கல்வி அமைச்சு விடுத்துள்ள சுற்றறிக்கையின் பிரகாரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் மாத்திரம் ஆறாம் தரத்திற்கு மாணவகளை இணைத்துக்கொள்ளும் செயற்பாடு நடைபெறும் எனவும் மேலும், 2024 ஆம் ஆண்டில், தரம் 1, 5 மற்றும் 6 தவிர இடைநிலை வகுப்புகளுக்குக் க.பொ.த. மாணவர் சேர்க்கை தொடர்பான விண்ணப்பங்கள் (உயர்தரம் உட்பட) பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும், அந்தப் பாடசாலைகளில் வெற்றிடங்கள் இருப்பின், அதிபர்களின் நேர்காணலின் மூலம் மாணவர்களின் பட்டியலைக் கல்வி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

New academic admission for school students




Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments