கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை காதல்
கண் விழித்து பார்த்த போது கலைந்த வண்ணமே
உன் கை ரேகை ஒன்று மட்டும் நினைவு சின்னமே
கதறி கதறி எனது உள்ளம் உடைந்து போனதே
இன்று சிதறி போன சில்லில் எல்லாம் உனது பிம்பமே
ஏனே உன்னோடு சில நாட்கள் ஆயிரம் நினைவுகள்
பார்க்கும் வேளையில் கடந்தது
எதும் அறியாமல் தொடங்கிய ஓர் பயணம்
யாவும் புரியும் வேளையில் முடிந்தது
புரியாதிருந்தால் புன்னகைத்து
இருந்திருப்பேனோ ஓர் என்னம்
உன்னோடுஆன உறவு மட்டும்
வாழ்நாள் முழுதும் நீள்வதில்லை
ஆனால்..? நினைவுகளாய் நித்தமும்!
நீயும் நானும் உறியும் உறவும்.
நன்றி - மதுமதூ
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்
0 Comments