நிழலாக நிற்கும் சூரியனாய்
நாளெல்லாம் நீ எனைக் காத்தாய்,
வார்த்தையில்லாமல் உன் காதலைச் சொன்னாய்
உன் மேனியில் உள்ள சுருக்கங்களால்.
உன்னதமான உன் கனவுகள் எல்லாம்
என்னில் பூக்கும் நாளுக்காகவே,
உன் மூச்சின் துடிப்பில் தான் உருவானது
என் வாழ்வின் முதல் ஓசை.
விளக்கின் தீபமாய் வழி காட்டி
வாழ்க்கை என்னும் போராட்டத்தில் வெற்றி கற்றுக் கொடுத்தாய்,
உன் அமைதியான பார்வையில் இருந்தது
என்றும் என் நம்பிக்கைச் சின்னம்.
நீ தந்த நீலம் நிறக் கனவுகள்,
நான் ஏறி செல்லும் ஆணிவேராய்,
அப்பா, நீயின்றி என்னுள் எதுவுமில்லை,
உன் நினைவுகளே என் இதயத்தின் பெருமிதம்!
நன்றி - சுதர்சன் லோ
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 Comments