தமிழ் கவிதை வருங்காலப் பிஞ்சு Tamil Kavithai Varungala Pinsukal - G.Banumathi

Tamil Kavithai Varungala Pinsukal - G.Banumathi

மனிதர்கள் பரபரப்பாக

 இயங்கிக் கொண்டிருந்த

 காலை நேரம்


கைக்கடிகாரத்தையும்

பேருந்தின் வருகையையும் பார்த்தபடியும்


முகத்தில் பூத்த

வியர்வைத் துளிகளை

கைக் குட்டைக்கு தந்த படியும்

நின்றிருந்தேன்


அந்த நிமிடம்

என் ஆடையைத் தீண்டினாள்

யாரென பார்த்தேன்

காலில் விழுந்தாள்

காலடி தள்ளி நின்றேன்


பசியை உணர்த்தினாள்

கைக்கு அகப்பட்ட

 காசுகளை அளித்தேன்


மூக்குச் சளியை

அழுக்குப் பாவாடைக்கு

அளித்து விட்டு

புன்னகை மலரை

தூவிச் சென்றது

வருங்காலப் பிஞ்சு!

நன்றி G.Banumathi

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.




Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments