கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை இயற்கை
காலையில் எழுந்ததும்
பச்சையைப் பார்
கண்களுக்கு நல்லது
பாட்டி சொன்ன வேதாந்தம்
நேற்றுவரைப் பார்த்தேன்
என்வீட்டு சன்னலுக்கு
மிக அருகில் பச்சைக்
கிளிகளோடு விளையாடிய
வனப்பான கொய்யாமரத்தை
இன்றோ! இல்லையது
என் கண்ணுக்கு அருகில்
மரணப்படுக்கையில் தள்ளிய
மனிதர்கள்! தூயக் காற்றைத்
தந்த நீ! உன் சுவாசத்தை
அடக்கிக் கொண்டாய்!
உனக்குப் பேசத் தெரியாததால்?
கடவுளிடம் நான் கேட்கும்
வரம்! நீ பேச வேண்டுமென்று!
நன்றி - Dharini.S
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்.
0 Comments