கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை அனைத்தும் ஆகலாம்
அன்பு செலுத்தக் கற்றுக் கொண்டால் அன்னை ஆகலாம்
அறிவை ஊட்டி அரவணைத்தால் தந்தை ஆகலாம்
கல்விக் கண்ணைத் திறந்து வைத்தால் ஆசான் ஆகலாம்
கடமை உழைப்பு தியாகத்தாலே தலைவன் ஆகலாம்
ஆசைகளைத் துறந்து விட்டால்புத்தன் ஆகலாம்
அருள்நெறிகள் பின்பற்றினால் சித்தன் ஆகலாம்
ஆய்ந்து நூல்கள் படிக்கப் படிக்க அறிஞன் ஆகலாம்
சேர்ந்து செயலில் வடிக்க வடிக்கக் கலைஞன் ஆகலாம்
எதையும் ரசிக்கத் தெரிந்து கொண்டால் கவிஞன் ஆகலாம்
எதிலும் நன்மை தேடும்போது மனிதன் ஆகலாம்
பகைவரையும் நேசித்தால் நீ மகான் ஆகலாம்
பல்லுயிரும் பாதுகாத்தால் தெய்வம் ஆகலாம்
ஆகாதது எதுவுமில்லை அனைத்தும் ஆகலாம்!
ஆக மொத்தம் நீயும் 'அப்துல்கலாம்' ஆகலாம்!
நன்றி - கவிஞர் கங்கை மணிமாறன்
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்.
.jpg)










0 Comments