கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை பனித்துளிகள்
பொண்டாட்டியைக் காணோம் என்று
செய்தித்தாளில் பெட்டிச் செய்தி
கொடுத்தார் ஒரு பணக்காரர்
செய்தி கொடுத்தவரின்
பெயரைக் காணோம்…
விடியற்காலையில் வெள்ளைப் புடவை
கட்டிக் கொண்டு வாசலில் வரிசையில்
நின்றனர் ஏராளமான பெண்கள்!
எண்ணிப்பார்க்கத் துணிந்தேன்
எண்ணிக்கையில் கணக்கு பிடிபடவில்லை
மீண்டும் எண்ணினேன்
மீண்டும் கணக்கு பிடிபடவில்லை
சற்று மேலே ஏறி நின்று எண்ணினேன்
தலைகள் மட்டும் தெரிந்தன!
மீண்டும் மீண்டும் பார்த்ததில்
ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது
எல்லோரும் வெள்ளப் புடவையில் தான் வந்திருந்தனர்
நல்ல வேளை யாரும் (அம்) மணமாக வரவில்லை…
நன்றி - முனைவர் அ. தகடூர் செவ்வியன்
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்..
0 Comments