கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை இயற்கை
வாழ்வின் இன்னல்களுக்கு இடையிலும்
இனியைத் தருவது இயற்கை....
பலமுறை ரசித்தும் சலிக்காத ரகசியம்....
பச்சை நிற இயற்கையின் அதிசயம்.
காலையில் உதிக்கும் கதிரவனும்
மாலையில் மறையும் பகலவனும் கால அழகின் கலையோவியங்கள்....
மாலை நேர செந்நிற வானமும்
மலைநேர செங்காந்தள் மலரும்
சொட்டும் மலைத்துளியும்
ஒரு சொட்டு பனித்துளியும் போதாதோ?
சொல்லில்லா இயற்கையின் சொர்கத்தை விளக்க....
கண்ணுக்கு மட்டுமே காட்சித் தரும் கலையோவியம்.....
எழுதி விளக்க முடியாத எழிலோவியம்....
சொல்லத் தெரியாத மொழியோவியம்.....
இவை யாவும் இயற்கை அன்னையின் அழகோவியம்.
நன்றி - அ.பைந்தமிழன்.
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்..
0 Comments