கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானி கராலயம், இலங்கைப் பிரஜைகளுக்கான முழு நிதியுதவியுடன் கூடிய சுமார் 200 புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.
மருத்துவம், சட்டம் உட்பட பல்வேறு கற்கை நெறிகளுக்கு இந்தப் புலமைப் பரிசில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்திய கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பினைத் தொடர்வதற்காக இந்தப் புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.





0 Comments