தமிழ் கவிதைகள் - கடைசி பாட்டு (Tamil Kavithai - Kadachi Paattu)

கவிதை போட்டி (Tamil Kavithai Competition 2022 - Sltamil)

Tamil Kavithai - Kadachi Paattu

கடைசி பாட்டு 

யாருக்கு தெரியும் எது யாருக்கு கடைசி பாட்டு 

இறைவனுக்கு மட்டும் தான் தெரியும் அவரவருக்கு இது தான் கடைசி பாட்டு

காதலில் பிரிவு ஏற்பட்டால் காதலனும் காதலியும் பாடுவார்கள் கடைசி பாட்டு

விவாகரத்து ஆனால் கணவனும் மனைவியும் பாடுவார்கள் கடைசி பாட்டு

இறந்தவர்களுக்கு சாவு வீட்டில் பாடும் ஒப்பாரியே அவர்களின் கடைசி பாட்டு

ஒரு சிறை கைதி இறக்கும் முன் தூக்குமேடையில் பாடுவான் கடைசி பாட்டு

சுதந்திர போராட்ட தியாகிகள் அன்னியர்களை விரட்டி அடித்து சுதந்திரம் வாங்கி தந்து பாடினார்கள் கடைசி பாட்டு 

ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு விடையளிப்பு விழாவில் பாடுவார்கள் கடைசி பாட்டு

பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிப்பை முடித்துவிட்டு பிரியாவிடை விழாவில் பாடுவார்கள் கடைசி பாட்டு 

ஊழியர்கள் அலுவுலகத்தில் வேலை முடித்துவிட்டு, அந்த நாள் இறுதியில் பாடுவார்கள் கடைசி பாட்டு

பள்ளி மாணவர்கள் வகுப்புகள் முடிந்து, அந்த நாள் இறுதியில் பாடுவார்கள் கடைசி பாட்டு

ஒரு குழந்தை பெரிதாக வளர்ந்து முதல் முதலில் பள்ளி செல்லும்பொழுது அம்மா அதற்கு பாடுவாள் கடைசி பாட்டு

மூன்றாம் பிறை” படத்திலிருந்து "கண்ணே கலைமானே" தான் கவியரசுகண்ணதாசனின் கடைசி பாட்டு 

"காவிய தலைவன்' படத்திலிருந்து "அல்லி அர்ஜுனா தான் கவிஞர் வாலியின் கடைசி பாட்டு

நன்றி - M.மனோஜ் குமார்

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும். 

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்


போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்



இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்..


Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

إرسال تعليق

0 تعليقات