சிலோன் இலங்கை (ஸ்ரீ லங்கா) என பெயர் மாற்றம் செய்யப்பட்ட காரணம்
வரலாற்று அடிப்படையில் ஶ்ரீலங்கா என்கிற பெயர் வருவதற்கு முன்னர் இலங்கை இலங்காபுரியென்றே தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப் பட்டு வந்ததை காணமுடியும். கம்ப இராமாயணம் இலங்கை என்றே சொல்கிறது.
மேலும் இராவணனை இலங்கை வேந்தன் என்றுதான் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. ஶ்ரீலங்கா என்கிற பெயர் இலங்கை என்கிற தமிழ்ப் பெயரின் சமஸ்கிருத மொழி வடிவம் என்பதாகத்தான் பார்க்க முடிகிறது.
சிங்கள மொழி இலங்கையில் எவ்வாறு உருவாகியது.
புத்த மதத்தை இலங்கையில் புகுத்த வந்த வட இந்திய மற்றும் தெலுங்கு மொழிகள் பேசும் (புத்த மதப் பிரச்சாரகர்கள் )பிக்குகள் தமது புத்த மத போதனைகளை செய்வதற்காக ,பாளி ,சமஸ்கிருத மொழிகளுடன் இலங்கையில் அக்காலத்தில் பேசப்பட்ட எழு எனப்பட்ட மொழியைக் கலந்து உருவாக்கிய மொழிதான் சிங்களம்.
இலங்கையை ஶ்ரீலங்கா என சமஸ்கிருத மயப்படுத்தி அழைக்கும் வழக்கத்தை சிங்கள மொழியில் புகுத்தியவர்கள் இந்தப் புத்த பிக்குகள் என்பதே எனது கருத்து. ஶ்ரீலங்கா என இலங்கையை அழைப்பது சிங்கள மக்களும் புத்த பிக்குகளும் மட்டுமே.
இலங்கையின் இந்தப் பெயரையம் புத்த மதத்தையும் சிங்கள மொழியையும் அரசியலுக்கு பயன்படுத்தினால் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்கிற யுக்தியை பண்டாரநாயக்கா என்கிற சிங்கள அரசியல்வாதி தெரிந்து கொண்டார்.
1947 ல் டி.எஸ். சேனநாயக்காவின் தலைமையிலான அரசில் பண்டார நாயக்கா ஒரு பங்காளியாக இணைந்து அமைத்தார். அடுத்த பிரமதராகும் வாய்ப்பு தமக்கே வேண்டும் என்கிற நினைப்பில் இருந்த வாய்ப்பை சேனநாயக்கா மறுத்ததும் அல்லாமல் தமது மகன் டட்லியே வரவேண்டும் என முடிவும் எடுத்தார்.
இதனால் 1951ல் பண்டார நாயக்கா விலகி ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தொடங்கி 1956 தேர்தலில் பிற இடதுசாரிக் கட்சிகளுடன் மக்கள் ஐக்கிய முன்னணிஎன்கிற கூட்டணியாக போட்டி இட்டு ஆட்சி அமைத்தார்.
பிரதமரானதும் இடதுசாரி கொள்கை காரணமாக வெளிநாட்டு கம்பனிகள் வங்கிகள் பெற்றோல் நிறுவனங்களை என்பனவற்றை தேசிய உடமைகள் ஆக்கியதால் அவர் சர்வ தேச அளவில் முதலாளித்துவ நாடுகளின் குறிப்பாக அமெரிக்காவின் கோபத்துக்கு ஆளானார்.
1960ல் அவரை ஒரு புத்த பிக்குவே அவரது வீட்டில் சுட்டுக் கொன்றார். ஒரு சம்பிரதாயமாக வழக்கு விசாரணை நடத்தி சந்தேக நபரான புத்த பிக்குவுக்கு மரணதண்டனை நிறைவேற்றப் பட்டது. ஆயினும் அவரது கொலையில் சீ.ஐ.ஏ.இருந்தது என்கிற சந்தேகம் மக்கள் இடையே இருக்கவே செய்கிறது.
அவரைத் தொடர்ந்து அவரது மனைவி ஶ்ரீமாவோ பிரதமராகி 1977 வரை ஆட்சி செய்தார். 1972ல் குடிஅரசாக மாற்றிய ஶ்ரீமாவோ அரசு தமது கட்சின் பெயரை முதலாகக் கொண்டு இலங்கையின் பெயரைச் ஶ்ரீ லங்கா என அரசியல் சாசனச் சட்டத்தில் உறுதிப் படுத்தினார்.
ஶ்ரீ லங்கா எனச் சமஸ்கிருத இலக்கியங்கள் இலங்கையைக் குறிப்பிட்டு வந்த போதிலும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சி செய்த காரணத்தால் அப்பெயர் இலங்கைக்கும் மாற்றப் பட்டது எனலாம்.
பின்னர் இலங்கையின் அரசமைப்பு மாற்றங்களைக் குறித்து ஓரு விமர்சனம் வைக்கப் பட்ட பொழுது ஒவ்வொருஅரசமைப்பு மாற்றமும் ஆளும் அரசியல் கட்சிகளின் தேவைகளுக்காகவே செய்யப் பட்டனவே அல்லாது நாட்டுக்கோ நாட்டு மக்களின் தேவைகளுக்காவோ செய்யப் படவில்லை எனச் சொல்லப் பட்டது.
1972 மே மாதம் தொடக்கம் இலங்கையின் பெயர் ஶ்ரீ லங்கா என மாற்றம் கண்டது.
இலங்கையின் பழைய பெயர்கள்
- தப்ரோபேன்.
- செரண்டிப்.
- சீல துவீபம்.
- சீலன்.
- சிலோன்.
- இலங்கை.
- ஈழம்.
இலங்கை நதிகளுக்கான பழைய பெயர்கள்
இலங்கையில் காணப்படும் சில நதிகளுக்கு வரலாற்று ரீதியாக வழங்கப்பட்ட புராதனப் பெயர்கள்.
- மல்வத்து ஓயா - கதம்ப நதி
- மகாவலி கங்கை - கங்கா நதி
- மாணிக்க கங்கை - கப்பரகந்தை நதி
- களனி கங்கை - கல்யாணி நதி
- கலா ஓயா - கோண நதி
- தெதுறு ஓயா - ஜஜ்ஜர நதி
- கிரிந்தி ஓயா - கரிந்தி நதி
- அம்பன் கங்கை - காரநதி
- கல் ஓயா - கல்கி நதி
- வளவ கங்கை - வனவாகினி
- கும்புக்கன் நதி- குடிகந்த நதி
0 تعليقات